மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. அதன்படி, சென்னை சென்ட்ரல், எழும்பூர், மெரினா, சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அண்ணாசாலை, சேப்பாக்கம், தேனாம்பேட்டை, தியாகராய நாகர், ஆழ்வார்பேட்டை, ஆயிரம் விளக்கு,மந்தைவெளி, பாரிமுனை, நுங்கம்பாக்கம், திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *