தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத் தீவுப் பகுதியிலும், தென்கிழக்கு வங்கக்கடலின் தமிழக கடலோரப் பகுதியிலும் வழிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.

இதற்கிடையே, அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு நேற்று ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், புதுச்சேரிக்கு எந்த ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *