ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (எச்.எம்.ஐ.எல்.,) நிறுவனம் கடந்த ஆண்டு 125 சிசி திறன் கொண்ட, ‘பிசிஎக்ஸ்’ என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இப்போது இந்த ஸ்கூட்டர், 150 சிசி திறனுடன் வெளிவர உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்கூட்டர் தற்போது விற்பனையாகி வரும், ஸ்கூட்டர்களை விட, ‘பிசிஎக்ஸ்’ ஸ்கூட்டர் அளவில் சற்று பெரியதாக இருக்கும். மேலும் இதில் 153 சிசி சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக் பெட்ரோல் இன்ஜின், விமேடிக் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ், எட்டு லிட்டர் பெட்ரோல் டேங்க், அலாய் சக்கரங்கள் மற்றும் டிஸ்க் பிரேக் வசதிகள் பொறுத்தப்பட்டுள்ளது.