சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் வீட்டுமனைக் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

“எக்ஸ்பேன்டிங் மெட்ரோபாலிஸ்’ என்ற பெயரில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியை காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கண்காட்சியில் அமைக்கப்படவுள்ள பல்வேறு அரங்குகளின் மூலம் தள்ளுபடி விலையில் தனி வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் விற்பனை, மாதத் தவணை முறையில் வீட்டுமனையை பெறும் வசதி, வீடு கட்டித் தரும் நிறுவனங்களை அணுகுதல் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு தேவையான ஆலோசனை அனுபவமுள்ள அதிகாரிகளால் வழங்கப்படும்.

மேலும் வீடு கட்டுதல், வீட்டுமனை வாங்கவும் கடன் பெறுதல், சலுகை விலை, குறைந்த முன்பணம் செலுத்தி சொத்துகள் வாங்குதல் ஆகியவை குறித்து கட்டுமானத்துறையைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள், வீட்டுமனை விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் விளக்கம் அளிக்கவுள்ளனர். கண்காட்சி நடைபெறும் இரு நாள்களிலும் வீடு, வீட்டுமனை வாங்குவோருக்கு பாங்க் ஆஃப் பரோடா வங்கி 9.90 சதவீத வட்டியில் கடனுதவி வழங்கவுள்ளது. அதுமட்டுமின்றி கண்காட்சிக்கு வருகை தரும் அனைவருக்கும் பரிசுக் கூப்பன்கள் வழங்கப்பட்டு அவர்களில் அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகளும் வழங்கப்படும் என அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

English Summary : Housing Exhibition to be conducted in Chennai on August 29th and 30th from 10:30am to 8:30pm.