விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகைக்கு தற்போது விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பங்களை இம்மாதம் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஒன்றை செய்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில், ”சர்வதேச போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் 2016ஆம் ஆண்டில் பதக்கங்கள் பெறும் தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் சிறப்பு ஊக்கத் தொகைக்காக விண்ணப்பிக்கலாம்.

அவர்களுக்கு தேவை இருந்தால் பயிற்சி, விளையாட்டுகளில் பங்கேற்க உதவித்தொகை, ஊட்டச்சத்து ஆலோசனை, விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை வழங்கப்படும்.

இந்த ஊக்கத்தொகைக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த படிவங்களை செயல் உறுப்பினர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கழகம், 116-ஏ, ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை-84 என்ற முகவரிக்கு ஜூலை 15-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட சான்றிதழ், ஆவணங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும்”

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English Summary : Athletes can now apply for incentives before July 15th.