பெங்கால் ஏரோட்ரோபோலிஸ் ப்ராஜக்ட்ஸ் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தால் இந்தியாவில் முதல் தனியார் விமான நிலையம் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள துர்காபூர் நகரில் வரும் ஏப்ரல் 14-ம் தேதியிலிருந்து செயல்படத் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விமான நிலையத்திற்கு புகழ்பெற்ற வங்காளக் கவியான நஜ்ருல் இஸ்லாமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நேற்று துர்காபூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த மாநில போக்குவரத்து செயலாளர் அலாபன் பண்டோபத்யாய், விமான நிலையத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் இறுதி உரிமம் இன்னும் ஒரு மாதத்திற்குள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

English Summary : Bengal’s Aerotropolis Prajakta Private Limited Company builds India’s first Private Airport.