ஐடி., தொழில்நுட்பம் மற்றும் பிபிஓ., கால்செண்டர் ஊழியர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றும் நடைமுறை, வரும் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக செவ்வாய்க்கிழமை நேற்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலிலிருந்து பாதுகாப்பதற்கும், சமூக விலகலை உறுதி செய்யவும், அனைத்து ஐ.டி நிறுவனங்களின் ஊழியர்களும், ஏப்.,30ஆம் தேதி வரை வீட்டிலிருந்து பணியாற்ற மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் இந்த நடைமுறையை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *