ஜெயா டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலை 7:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘காலை மலர்’. இதில் இடம்பெறும் ஒரு பகுதி ‘சிரிப்போம் சிந்திப்போம்’.

இதில், அன்றாட நம் வாழ்க்கையில் சந்திக்கும் மாந்தர்களையும், எதிர்கொள்ளும் நிகழ்வுகளையும் மையப்படுத்தி நகைச்சுவை ததும்ப பேசிவருகிறார் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன்.

மருத்துவமனைகளில் நடக்கும் நகைச்சுவைகள், பேருந்து பயணங்களின் போது நிகழும் வேடிக்கையான சம்பவங்கள் என நாள்தோறும் ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு, ஆழமானக் கருத்துக்களையும் அலட்டலில்லாத எளிய நடையில் பேசுவதால் இந்நிகழ்ச்சி அனைத்து தரப்பு ரசிகர்களையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *