vijayshruthiஇளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘புலி’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ‘ஏண்டி ஏண்டி என தொடங்கும் ஒரு பாடலை மட்டும் வரும் 24ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் விஜய், ஸ்ருதிஹாசன் பாடிய இந்த பாடல் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த பாடல் ஒரு சிறப்புத் தன்மையையும் பெற்றுள்ளது. ஒரு படத்தில் ஹீரோ, ஹீரோயினியாக நடிக்கும் நடிகர், நடிகர்களே பாடலை பாடுவது என்பது தற்போது அபூர்வமாக நடக்கும் ஒரு விஷயம் ஆகும்.

‘புலி’ படத்தில் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் விஜய், ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் இந்த பாடலை பாடி, நடித்திருக்கும் சிறப்பை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் விஜய், ப்ரியங்கா சோப்ரா தமிழன்’ என்ற படத்தில் பாடி நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஏண்டி ஏண்டி’ என்ற ஒரு பாடல் மட்டும் வரும் 24ஆம் தேதியும், மற்ற பாடல்கள் வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதியும் ரிலீஸாகும் என தெரிவித்துள்ள படக்குழுவினர், இந்த படம் வரும் செப்டம்பர் 17ல் ரிலீஸாகும் என்றும் கூறியுள்ளனர்.

English Summary:July 24th release a song sung by vijay and Shruti Haasan