கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இன்று (20.07.2023) முதல் மக்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. மக்களுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் கடை பணியாளர்கள் டோக்கன், விண்ணப்பங்களை வழங்க உள்ளனர்.

ஒவ்வொரு ரேஷன் கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்க உள்ளனர்.

ரேஷன் கடைகளில் டோக்கன் குறித்த தகவல்கள் அறிவிப்பு பலகையில் வைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக வருகிற ஜூலை 24-ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் நடைபெறும். முதல் கட்டமாக 60%, இரண்டாம் கட்டமாக 40% செயல்படுத்தப்பட உள்ளது. டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்களை வீடு வீடாக சென்று விநியோகம் செய்யும் பணியில் 3,400 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

விண்ணப்பங்கள் வழங்கும்போது வங்கிக் கணக்கு இல்லாத பணியாளர்களை வங்கி கணக்கு தொடங்க வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *