கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சி “வா தமிழா வா”.

சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள், பொது மக்களின் பரவலான பேச்சு, நேர்மறை எண்ணங்கள் என மக்களின் பலவிதமான கருத்துகளை வெளிப்படுத்த மேடை அமைத்து தரும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு புதிய தலைப்புடன் பல்வேறு சூழ்நிலைகளில் நடக்கும் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியலையும், மனதிற்கு நெருக்கமான, அன்றாடம் நாம் பார்த்து கடந்து செல்லும் தலைப்புகளை விவாதிக்க வழி வகுக்கும் இந்த நிகழ்ச்சி, அவற்றில் நிலவும் பிரச்சனைகளைக் களையவும் வழி வகுக்கிறது.

தமிழ் சினிமாவில், தனித்துவமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி மக்களின் குரலாய், மக்கள் நினைப்பதை பேசிட வாய்ப்பு வழங்கும் ஓர் மேடை அமைத்து தருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *