வேலுச்சாமியை மிரட்டும் பூஜா..!

சூர்யாவை ஏற்றுக்கொள்வாரா ராஜாராம்..?

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத் தொடர் “பொன்னி C/O ராணி”.

பொன்னியாக ப்ரீத்தி சஞ்ஜீவும், ராணியாக ராதிகா சரத்குமாரும் நடிக்கும் இந்த தொடரில், மாயாவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட பொன்னி வெற்றி பெற பொன்னி மீது கடும் கோபத்தில் இருக்கிறார் மாயா.

பொன்னியை பழிவாங்க அடுத்தகட்ட திட்டங்களை மாயா திட்டமிட, வேலுச்சாமியிடம் போனில் பேசும் பூஜா, மாயா பற்றிய ரகசியம் தனக்கு தெரியும் என வேலுச்சாமியை மிரட்டுகிறாள். ஒருபக்கம் மாயாவிடமும், மறுபக்கம் பூஜாவிடமும் மாட்டிக் கொண்டு தவிக்கும் வேலுச்சாமி, இவர்களை எப்படி சமாளிக்கப்போகிறார்? என்கிற எதிர்பார்ப்புடன் தொடர் செல்கிறது.

மறுபுறம் ஐஸ்வர்யாவுக்கு சின்னதம்பி மீது காதல் வர, குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத ஸ்வேதா வாடகைத் தாயாக வரவிருப்பரை சந்திக்க செல்ல, பவித்ராவுக்கு வளைகாப்பு நடத்தப்போவதாக சூர்யா, ராஜாராமை அழைக்க வர என தொடர் பல்வேறு திருப்பங்களுடன் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் செல்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *