karthikகடந்த 1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நவரச கலைஞனாக வலம் வந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் கார்த்திக். பின்னர் சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த

அவர் சமீபத்தில் தனுஷ் நடித்த ‘அனேகன்’ படத்தின் மூலம் அட்டகாசமான வில்லனாக ரீ எண்ட்ரி ஆனார். இந்நிலையில் அவர் ‘அமரன் 2’ படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பிரபல இயக்குனர் வசந்த் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த வெற்றிசெல்வன் என்பவர் இயக்கவுள்ள முதல் படத்தில் ‘வைபவ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ‘ஜிந்தா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் கார்த்திக் இந்த படத்தில் புதிதாக இணணந்துள்ளார். கார்த்தி, வைபவ் நடிக்கும் ஆக்சன் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த தனது அனுபங்களை கூறிய வைபவ் ‘கார்த்திக் சார் அவர்களுடன் நடிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த படத்தில் எங்கள் இருவரின் கேரக்டர்களுமே முக்கியத்துவம் வாய்ந்தது. கார்த்திக் இந்த படத்தில் வில்லனாக நடித்தாலும், இதுவரை அவர் ஏற்றிராத வித்தியாசமான வேடம்’ என்று கூறியுள்ளார்.

இந்த படத்தின் இயக்குனர் வெற்றிசெல்வன் கூறியபோது, ‘இந்த படத்தின் ஸ்கிரிப்டை நான் எழுதும்போதே கார்த்திக்கை மனதில் வைத்துதான் எழுதினேன். இதுவொரு காமெடி கலந்த கேங்ஸ்டார் படம். எனது எனர்ஜியான ஸ்கிரிப்ட்டுக்கு தேவையான எனர்ஜியை கார்த்திக் மற்றும் வைபவ் திரையில் கொண்டு வருவார்கள் என்று நான் கண்டிப்பாக நம்புகிறேன்’ என்று கூறினார்.

விஜய் ஆண்டனி நடித்த ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தில் நடித்த சுஷ்மா இந்த படத்தில் வைபவ் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஹசார் காசிப் அவர்கள் இசையமைக்கின்றார் .இவர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary:Karthik Made a Villain Again.