சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கெல்லிஸ் சாலையில் கரூர் வைஸ்யா வங்கியின் புதிய கிளை சமீபத்தில் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம் புத்தூரில் ஒரு புதிய கிளையை தொடங்கிய கரூர் வைஸ்யா வங்கி, மிகக்குறுகிய காலத்திலேயே அடுத்த புதிய கிளையை சென்னையில் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திரா தலைவர் எல்.சபாரத்தினம் அவர்கள் இந்த புதிய கிளையை தொடங்கி வைத்தார். இந்த திறப்புவிழா நிகழ்ச்சியில் கரூர் வைஸ்யா வங்கியின் சென்னை பெருநகர பிரிவின் தலைவர் ஜி.ஆர்.சாய்ராஜ், பரத நாட்டியக் கலைஞர் ஊர்மிளா சத்யநாராயணன், மூத்த நரம்பியல் அறுவைச் கிசிச்சை நிபுணர் எஸ்.கல்யாணராமன், அகர்வால் கல்வி அறக்கட்டளையின் தலைவர் ஹரிசங்கர் அகர்வால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

English Summary : Karur Vysya Bank has recently opened a new branch in Kellis Road in Kilpauk.