chennai-corporation-3110201பெருநகர சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களிடம் இருந்து 2016 – 2017 ஆம் ஆண்டுக்கான உயிர் சான்றுகள் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பெறுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களிடமிருந்து 2016-2017 ஆம் ஆண்டுக்கான உயிர்ச் சான்றுகள் மார்ச் 1-ஆம் தேதியிலிருந்து, ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளப்படும். இவை அலுவலக வேலை நாட்களில் காலை 10.30 மணி முதல், பிற்பகல் 4 மணி வரை உயிர்ச் சான்று ஓய்வூதியப் பிரிவில் பெற்றுக்கொள்ளப்படும்.

ஓய்வூதியதாரர்கள் அணுக வேண்டிய மாதம்

1. டிசம்பர் 31, 1979-ஆம் ஆண்டு வரை ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் – மார்ச் 2016.

2.ஜனவரி 1, 1980 முதல் டிசம்பர் 31, 1989 வரை ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் – ஏப்ரல் 2016.

3. ஜனவரி 1, 1990 முதல் டிசம்பர் 31, 1999 வரை ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் – மே 2016.

4. ஜனவரி 1, 2000 முதல் பிப்ரவரி 2016 வரை ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் – ஜூன் 2016.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English Summary: Life testimonials from March to pensioners. Chennai Corporation Announcement.