தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை பெறும் விண்ணப்ப படிவங்கள் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மகளிர் உரிமை தொகை திட்ட வேலைகள் தொடர்பாக நாளை அனைத்து கடைகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் சேருவதற்கான விண்ணப்பப்படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்காக ரேஷன் கடைகளுக்கு அருகே உள்ள இடங்களில் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இந்தநிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் எழுதிய கடிதத்தில், நிர்வாகக் காரணங்களுக்காக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. அதற்கு ஈடாக 26.8.23 அன்று (சனிக்கிழமை) விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *