கும்மிடிப்பூண்டி -கவரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, திங்கள்கிழமை (செப். 17) முதல் வரும் 27-ஆம் தேதி வரை, 10 நாள்களுக்கு (செப்டம்பர் 21-ஆம் தேதி தவிர) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட நாள்களில் காலை 9.15 மணி முதல் பகல் 11.55 மணி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பகுதி ரத்து: மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – கும்மிடிப்பூண்டிக்கு காலை 8.15, 9.30, 10.25 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் பொன்னேரிக்கும் கும்மிடிப்பூண்டிக்கும் இடையே பகுதி ரத்து செய்யப்படுகின்றன. இந்த ரயில்கள் மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – பொன்னேரிக்கு இடையே மட்டும் இயக்கப்படும்.

மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – கும்மிடிப்பூண்டிக்கு காலை 9 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் மீஞ்சூருக்கும் கும்மிடிப்பூண்டிக்கும் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-மீஞ்சூர் இடையே மட்டும் இயக்கப்படும்.

கும்மிடிப்பூண்டி -மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ்க்கு காலை 9.50, 10.50, பகல் 11.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டி- பொன்னேரி இடையே பகுதி ரத்து செய்யப்படுகின்றன. இந்த ரயில்கள் பொன்னேரியில் இருந்து மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் வரை மட்டும் இயக்கப்படும்.

சூலூர்பேட்டை – மூர்மார்க்கெட் காம்ப்ளஸýக்கு காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி – மீஞ்சூர் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *