மாண்டஸ் புயல் காரணமாக இன்று 26 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயலானது தற்போது காரைக்காலில் இருந்து சுமார் 240 கிமீ தொலைவில் கிழக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருக்கிறது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று (09.12.2022) நள்ளிரவு கரையை கடக்க உள்ளது.

இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தமிழகத்தில் மொத்தம் 26 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (09.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:

  • சென்னை
  • காஞ்சிபுரம்
  • கடலூர்
  • ராணிப்பேட்டை
  • விழுப்புரம்
  • செங்கல்பட்டு
  • திருவள்ளூர்
  • வேலூர்
  • திருவாரூர்
  • பெரம்பலூர்
  • தஞ்சாவூர்
  • அரியலூர்
  • மயிலாடுதுறை
  • புதுக்கோட்டை
  • கள்ளக்குறிச்சி
  • சேலம்
  • நாமக்கல்
  • திருவண்ணாமலை
  • தருமபுரி
  • நாகப்பட்டினம்
  • திருச்சி
  • திருப்பத்தூர்
  • சிவகங்கை
  • ராமநாதபுரம்
  • கரூர்
  • தூத்துக்குடி
  • கொடைக்கானல், சிறுமலை (வட்டம்)
  • தேனி – பள்ளிகளுக்கு மட்டும்
  • கிருஷ்ணகிரி – பள்ளிகளுக்கு மட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *