manirathnam_0605சமீபத்தில் ‘ஓகே கண்மணி’ என்ற வெற்றி திரைப்படத்தை இயக்கிய பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்னம் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ல இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

டெல்லி அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தங்கள் மருத்துவமனையில் மணிரத்னம் அனுமதிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்த போதிலும், அவர் உடல்நிலை குறித்து எவ்வித தகவல்களையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

டெல்லி மருத்துவமனை நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “இயக்குநர் மனிரத்னம் அவர்களின் குடும்பத்தினர் அவரது உடல் நிலை குறித்த தகவல்களை வெளியில் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரது உடல்நிலை குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை’ என தெரிவித்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து மணிரத்னம் அவர்களின் மனைவி சுஹாசினி விடுத்த அறிக்கை ஒன்றில், ‘மணிரத்னம் அவர்கள் ரெகுலர் செக் அப்பிற்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை அவர் சென்னை திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 2004ஆம் ஆண்டு மணிரத்னம் அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணமானார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஓகே கண்மணி’ படத்தை அடுத்து மணிரத்னம் தனுஷை வைத்து திரைப்படம் ஒன்றை இயக்க திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.