வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை போன்ற தொடர் வெற்றி படங்களை கொடுத்த பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான ‘ரஜினிமுருகன்’ விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அஜீத்தை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்து தனிப்பட்ட மற்றும் திரையுலகை சேர்ந்த பல விஷயங்களை பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து சிவகார்த்திகேயன் இதுவரை யாரிடமும் தெரிவிக்காத நிலையில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஜீத்துடன் ஏற்பட்ட சந்திப்பு குறித்து கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறியதாவது, ‘என்னுடைய வாழ்க்கையில முக்கியமான மொமண்ட்னு அஜீத் சாரை சந்திச்சு பேசினதை சொல்லலாம். எனக்கு எங்க அப்பாவோ, அண்ணனோ தட்டிக்கொடுத்து சொல்ல வேண்டிய விஷயங்களை அஜீத் சார் சொன்னாங்கன்னு நம்புறேன். அதைப்பத்தி வெளியே அதிகம் பேசிக்காததுக்கு காரணம், அதை விளம்பரமா யாரும் நினைச்சுடக்கூடாதேங்கற கவலைதான். அந்த சந்திப்புல சினிமா பத்தி குறைவாதான் பேசினோம். என்னைப்பத்தி கேள்விப்பட்ட விஷயங்களை சொல்லிப் பாராட்டினார். ‘நீங்க இன்னும் பெருசா வரணும்’னு வாழ்த்தினார்.

நம்ம லைஃப்ல நாம எப்படி இருக்கணும்னு அஜீத் சார் சொன்ன விஷயங்கள் பிரமிப்பா இருந்துச்சு. ஒரு அட்வைஸா சொல்லாமல், அவரோட வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபங்களைப் பகிர்ந்துக்கிட்டார். நிச்சயம் அது எனக்கொரு பாடம். அவர் சொன்ன விஷயங்களை கடைப்பிடிச்சா நான் உச்ச நடிகரா ஆகுறேனோ இல்லையோ, நல்ல மனுஷனா ஆவேன். அவரை சந்திச்ச பிறகு நான் வேறொரு ஆங்கிள்ல என்னையே பார்க்க ஆரம்பிச்சிட்டேன். அவர் எனக்கு கொடுத்த கான்ஃபிடண்ட் எனக்கு ரொம்ப பெரிய விஷயம். அவருடன் ஏற்பட்ட இந்த சந்திப்புதான் எனது வாழ்வின் முக்கிய திருப்புமுனை என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.

இவ்வாறு அஜீத் சந்திப்பு குறித்து சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

English Summary : Sivakarthikeyan says to a reporter that meeting Ajith sir is his turning point in his life.