Radhika Sarathkumar Saree Photos Stills
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி பத்மனாபன் அவர்கள் முன்னிலையில் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் விஷால், கார்த்தி, நாசர், பொன்வண்ணன், கருணாஸ் ஆகிய ஐவர் பாண்டவர் அணி என கூறப்படுகிறது. இந்த அணியினர்களும் சரத்குமார் தலைமையிலான அணியினர்களும் விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் சரத்குமார் ,ராதிகா சரத்குமார், சிம்பு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பில் விஷால் அணியினர் தங்கள் அணி மீது கூறி வரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி வருவதாகவும் இதற்காக அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை ராதிகா கூறியதாவது: ”தற்போதைய நடிகர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் முறைகேடு செய்துள்ளனர் என எவ்வித அடிப்படை ஆதாரங்களும் இன்றி விஷால் அணியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் எதிரணியினர் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும் சமீபத்தில் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சூர்யா-கார்த்தியின் தந்தையான நடிகர் சிவகுமார் அவர்களே நாங்கள்தான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று எங்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்’ என கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் சரத்குமார் கூறியதாவது: “விஷால் அணியினர் நாங்கள் முறைகேடு செய்ததாக எவ்வித ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுக்களை அனைத்து இடங்களிலும் கூறி வருகின்றனர். இதே நடிகர் சங்கத்தில் அவர்கள் என்னென்ன தவறுகள் செய்தார்கள் என்பதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. இந்த ஆதாரங்களை வெளியே கூறினால் அவர்களுக்குத்தான் அசிங்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

English Summary : Radhika said that Vishal should apologize for his unproven accusation.