metro_startசென்னை நகர் மக்களின் கனவுதிட்டமான மெட்ரோ ரயில் சேவை திட்டத்தின் ஒரு பகுதியான கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் கடந்த மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த மெட்ரோ ரயில் இயங்கும் நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி ஆலந்தூர் – கோயம்பேடு இடையிலான மெட்ரோ ரயில் சேவையின் நேரம் நாளை முதல் அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆலந்தூர் – கோயம்பேடு இடையிலான மெட்ரோ ரயில் சேவை வார நாள்களில் காலை 6 முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும். மேலும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலந்தூர் – கோயம்பேடு இடையே முதல் மெட்ரோ ரயில் சேவை காலை 8 மணிக்குத் தொடங்கும்.

இனிவரும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைசி மெட்ரோ ரயில் சேவை முறையே ஆலந்தூர், கோயம்பேட்டில் இருந்து இரவு 10 மணிக்கு இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Metro train service timing changed tomorrow onwards