employr18De2சென்னை மாநகரில் அவ்வப்போது படித்த பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடந்து வருகிறது. அந்த வரிசையில் சென்னை கிண்டியில் உள்ள ஒலிம்பியா தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 2ஆம் தேதி இளைஞர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒன்று நடைபெறவுள்ளது.

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், பொறியியல், நிதி, காப்பீடு போன்ற துறைகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் பல்வேறு பணியிடங்களுக்குத் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

பிளஸ் 2 வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்புகள் படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். இதுகுறித்து மேலும் தகவல் பெற www.ryabookbank.com என்ற இணையதள முகவரியிலும், 044-25610369, 25610978 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

English Summary:Camp for Private Employment Agency in Chennai on August 2