சென்னையில் ஆவின் பால் விநியோகம் செய்வதில் 2வது நாளாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆவின் நிறுவனம் சார்பில் கொழுப்பு சத்து அடிப்படையில் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு, நீல நிற பாக்கெட்டுகளில் பால் விற்பனை செய்யப்படுகிறது. இது மட்டும் இன்றி பசும்பால் விற்பனையும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து அம்பத்தூர் ஆவின் பண்ணைக்கு வரவேண்டிய பால் தாமதமாக வருவதால் இரண்டாவது நாளாக பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பால் சரியான நேரத்தில் செல்லாததால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பால் வரத்து குறைவின் காரணமாக பால் பாக்கெட் உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிப்பு சரி செய்யப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *