சென்னை, தமிழகத்தில் பருவ மழைக்கு இடைவெளி கிடைத்துள்ளது. இன்னும், ஐந்து நாட்களுக்கு, கனமழை எச்சரிக்கை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை வட மாநிலங்களுக்கு நகர்ந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம், தமிழகம் முழுவதும் திடீர் மழை பெய்தது. இந்நிலையில், இன்னும் ஐந்து நாட்களுக்கு கனமழை இல்லை என, வானிலை மையம் அறிவித்துள்ளது.’வரும் நாட்களில், வானிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, உரிய எச்சரிக்கை வெளியிடப்படும்.

அதுவரை, மாநிலம் முழுவதும், மிதமான வெயில் நீடிக்கும். மாலை அல்லது இரவு நேரங்களில், திடீர் மழை பெய்யலாம். சென்னையில், வானம் மேக மூட்டமாக காணப்படும். இரவு அல்லது மாலை நேரங்களில், மழைக்கு வாய்ப்பு உண்டு’ என, கூறப்பட்டுள்ளது.

நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக, நாமக்கல் – சேந்தமங்கலத்தில், 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. ஓமலுார், நீலகிரி, சின்ன கல்லார், கொல்லி மலையில், 4 செ.மீ., பதிவானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *