டெல்லியில் நடைபெற்ற சர்வதேச செஸ் கிராண்ட்மாஸ்டர்தொடரில், சாம்பியன் பட்டம் வென்ற 12 வயது தமிழக வீரர்குகேஷுக்குபிரதமர் நரேந்திர மோடி தனதுபாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த குகேஷ், செஸ் விளையாட்டில்பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார். 12 வயதே ஆன அவர், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய இளம்செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 5தங்க பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச செஸ் கிராண்ட்மாஸ்டர்தொடரில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை அவர் பெற்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து குகேஷைபாராட்டி பிரதமர் மோடி ட்விட்டரில்,”செஸ் விளையாட்டின் சாம்பியன். இளம் வீரர் குகேஷ்,தனது சாதனை மூலம் நாட்டுக்கு பெருமை தேடித் தந்துள்ளார். அவருடையதிறனும், ஆர்வமும் பாராட்டப்படவேண்டியது. அவருக்கும், அவருடைய வருங்கால சாதனைகளுக்கும் எனது வாழ்த்துக்களைதெரிவித்துக் கொள்கிறேன்” என்று எழுதினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *