சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று “எம்.எஸ்.எம்.இ. எஸ்க்போ- 2015′ என்னும் சிறு தொழில் முனைவோர் பொருள்காட்சி ஒன்று தொடங்கி வைக்கப்பட்டது.  சிறுதொழில் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ள இந்த பொருட்காட்சியை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் தொடங்கி வைத்தார்.

இந்த பொருட்காட்சியின் சிறப்புகள் குறித்து  பொருள்காட்சி ஏற்பாட்டாளர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, “ஆட்டோமொபைல், சூரியமின்சக்தி உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அரங்குகள் இந்த பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளதாகவும் மே 10-ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள இந்த பொருட்காட்சியை அனைவரையும் இலவசமாக பார்த்து பயன்பெறலாம் என்றும் கூறியுள்ளனர்.

 

English Summary: MSME EXPO 2015 is started yesterday in Chennai Valluvar Kottam.