natarajanசென்னை மயிலாப்பூர் தொகுதியில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி எம்.எல்.ஏ ஆன முன்னாள் காவல்துறை அதிகாரி மயிலாப்பூரில் தொடரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தக் கோரி, சென்னை பெருநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார் .

மயிலாப்பூர் லஸ் முனை, மாட வீதிகள், சாய்பாபா கோயில் உள்ளிட்ட பல பகுதிகளில் நீண்ட நாள்களாக போக்குவரத்து பிரச்சனை இருந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை காவல்துறையினர்களிடம் மனு கொடுத்துள்ளனர். குறிப்பாக, முக்கியச் சாலைகள் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மயிலாப்பூர் எம்எல்ஏ ஆர்.நடராஜிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நட்ராஜ் எம்.எல்.ஏ மயிலாப்பூரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், ஒருவழிப் பாதைகளை மீண்டும் இருவழிப் பாதைகளாக மாற்ற வலியுறுத்தியும் சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று காவல் ஆணையர் உறுதி அளித்ததாக ஆர்.நடராஜ் தெரிவித்தார்.

English Summary: Mylapore MLA Natrajan gave a petition for Transport Problem.