மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘ஓகே கண்மணி’ நல்ல ஹிட்டானதை அடுத்து, அவருடைய அடுத்த படம் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் கார்த்தி, ஸ்ருதிஹாசன், துல்கார் சல்மான் ஆகியோர் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என புகழப்படும் நயன்தாரா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே நயன்தாரா, கார்த்தியுடன் ‘காஷ்மோரா’ என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் அவருடன் இந்த படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் நயன்தாராவிடம் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாரா நடிப்பில் மாயா, நானும் ரவுடிதான், காஷ்மோரா, தனி ஒருவன், இது நம்ம ஆளு, திருநாள் ஆகிய படங்கள் இவ்வருடத்திற்குள் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Nayanthara to play a important role in Maniratnam next film.