சென்னை திருநெல்வேலியில் இருந்து சென்னை – எழும்பூருக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து டிச., 25ல் மாலை 6:15க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5:30 மணிக்கு எழும்பூர் வந்தடையும். ரயிலில் ‘ஏசி’ இரண்டடுக்கு பெட்டி ஒன்று மூன்றடுக்கு,’ஏசி’ பெட்டிகள் இரண்டு 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். மதுரை, திருச்சி, விருத்தாசலம் விழுப்புரம் வழியாக எழும்பூர் செல்லும் இந்த ரயிலுக்கான முன்பதிவு துவங்கி விட்டது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *