திருவொற்றியூரில் ராஜாசண்முகம் நகரில் இருந்து பஸ் இயக்க வேண்டும் என மாநகர போக்குவரத்து கழகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதை தொடர்ந்து , ராஜா சண்முகம்நகரில் இருந்து எழும்பூர் வரை புதிய தடத்தில் (தடம் எண் 28ஏ) என்ற பஸ் இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்து உள்ளது.

முன்னதாக இப்பகுதி மக்கள் பாரிமுனை, கோயம்பேடு, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல நேரடி பஸ் வசதி இல்லாததால், 2 கி.மீ தூரம் நடந்து சென்று, அஜாக்ஸ் பஸ் நிலையம் சென்று, அங்கிருந்து சென்று வந்தனர்.

English Summary : A new bus service from Raja Shanmugam Nagar to Egmore has been introduced.