Poonamallee-High-Road-31102சென்னை அருகேயுள்ள முக்கிய பகுதி பூந்தமல்லி. இந்த பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளதால் இதுகுறித்து ஆலோசனை செய்ய நேற்று பூந்தமல்லி நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பூந்தமல்லி நகராட்சிப் பகுதியில் புதிய சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பூந்தமல்லி நகர்மன்றத் தலைவர் ஜி.ஆர்.திருமலை தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா, நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் போது, நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 4 கோடி மதிப்பில் கான்கிரீட் சாலைகள், தார் சாலைகள் அமைத்தல், பஸ் நிலைய வளாகத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் 2 உயர் மின் கோபுர விளக்குகள் அமைத்தல், ரூ. 50 லட்சம் மதிப்பில் இரண்டு சமுதாய கழிப்பறைகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
English summary-New road will be laid in Poonamallee High Road