simbunayanசிம்பு, நயன்தாரா நடிப்பில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தின் மீதி பகுதிகளை முடிக்க நடிகை நயன்தாரா ஒத்துழைப்பு தரவில்லை என சமீபத்தில் டி.ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்ததாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் ‘இது நம்ம ஆளு’ பட விவகாரம் குறித்து நயன்தாரா மீது எவ்வித புகாரும் தெரிவிக்கவில்லை என சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து சிம்பு பேட்டி ஒன்றில் கூறியதாவது: ”கடந்த சில நாட்களாக நயன்தாராவைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை. அவருடைய மீதிச் சம்பளமான 50 லட்சத்தைத் தரவும் மீதமுள்ள இரு பாடல்களுக்குத் தேதிகள் வாங்கவும் தாயாரிப்பாளர்கள் சங்கத்தை அணுகினோம். சங்கத்திடம் பணம் தந்து அவருடைய தேதிகளை வாங்கித் தரச் சொன்னோம். இதுபற்றி கடிதம் எழுதித் தரச் சொன்னார்கள். அப்படியே எழுதி கொடுத்தோம். அது எப்படி புகார் ஆகும்? நயன்தாரா தேதி கொடுத்தால் அந்த இரண்டு பாடல்களையும் படமாக்குவோம். இல்லாவிட்டால் அவை இல்லாமல் படத்தை வெளியிடுவோம். எனக்கு யார் மீதும் எந்தப் புகாரும் இல்லை. நயன்தாரா எப்போதும் என் நண்பராக இருப்பார்” என்று கூறினார்.

இந்நிலையில் நயன்தாரா தரப்பில் இந்த புகார் குறித்து விளக்கமளித்த போது, ‘இந்த படத்தின் பாடலுக்காக 8 முறை கால்ஷீட் கொடுத்ததாகவும், ஆனால் படக்குழுவினர் தான் கொடுத்த கால்ஷீட்டை வீணடித்துவிட்டதாகவும், தற்போது தான் பல படங்களில் கமிட் ஆகி பிசியாக இருப்பதால், இனிமேல் அந்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்க வாய்ப்பு இல்லை’ என்று அவர் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர் பாண்டியராஜ் அவர்களும் நயன்தாரா மீது எந்த தவறும் இல்லை என்றும், படத்தை தாராளமாக கூடிய விரைவில் ரிலீஸ் செய்யலாம் என்றும் கூறியுள்ளார். எனவே நயன்தாரா பாடல் இல்லாமல் விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary:No Complaints Did Not On Nayanthara.Simbu Description.