நீலகிரி மாவட்டம் உதகையில் மே 19ம் தேதி மலர்க்கண்காட்சி தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக நடத்தப்படும் கோடை விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இது குறித்து நீலகிரி கலெக்டர் அம்ரித் கூறியதாவது:

இந்த ஆண்டு கோடை விழா மே 6ம் தேதி கோத்தகிரியில் 12வது காய்கறி கண்காட்சியுடன் துவங்குகிறது.

  • மே 6, 7 ஆகிய 2 நாட்கள் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடத்தப்படும்.
  • 10வது வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி கூடலூரில் மே 12ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை 3 நாட்கள் நடத்தப்படும்.
  • 18வது ரோஜா கண்காட்சி ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் மே 13ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை 3 நாட்கள் நடத்தப்படும்.
  • 125வது மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே 19ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடத்தப்படவுள்ளது.
  • 63வது பழக் கண்காட்சி வரும் மே 27ம் தேதி துவங்கி 2 நாட்கள் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை மற்றும் பிற துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *