தமிழகத்தில் நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, செய்முறை தேர்வு நடத்த மார்ச் 31 (நாளை) வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி 10ம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகிறது. இவர்களுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வுகளை, அந்தந்த பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நடத்திக் கொள்ள அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி, கடந்த இரு வாரமாக அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு நேற்றுடன் (28.03.2023) முடிவடைந்தன. இதில் சில மாணவர்கள் கலந்து கொள்ளாத நிலையில் வரும் 31.03.2023 வரை கூடுதல் கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி 10ம் வகுப்பு செய்முறை தேர்விற்கு வரும் 31ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் செய்முறை தேர்விற்கு வருகை புரியாத அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் தனி கவனம் செலுத்துமாறு அரசு தேர்வுகள் இயக்குனர் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *