சென்னையை அடுத்த பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கடலூர் மாவட்டம் வீராணம் ஆகிய அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் சென்னை நகரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

இந்த அணைகளில் தற்போது 7,496 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இது, மொத்த கொள்ளளவில் 64 சதவீதம் ஆகும். கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீர் தமிழகத்துக்கு வழங்கப்படும்.

தற்போது கோடைகாலம் என்பதால் சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டத்தை உயர்த்தி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறை ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

அதன்படி, கண்டலேறு அணையில் இருந்து கடந்த 1-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஓரிரு நாட்களில் தமிழக எல்லையான திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *