சுரங்கப்பாதை பணிகள் காரணமாக, சென்னை வண்ணாரப்பேட்டையில் மே 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கண்ணன் ரவுண்டானாவில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள் கண்ணன் தெரு வழியாக செல்ல தடை விதிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்கள், பரசுராமன் தெரு, தர்மராஜா கோவில் தெற்கு பாதை வழியாக கண்ணன் சாலையை சென்றடையலாம். கார் உள்ளிட்ட வாகனங்கள், திருவொற்றியூர் சாலை, எம்.எஸ்., நாயுடு தெரு, சின்ன முனுசாமி தெரு வழியாக கண்ணன் சாலையை அடையலாம்.

இதேபோல கனரக வாகனங்கள், சிபி சாலை, கொருக்குப்பேட்டை ரயில்வே கேட், கண்ணன் தெரு, போஜராஜா நகர் ரயில்வே கேட் வழியாக, போஜராஜா நகரை அடையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *