திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் 28, 29ம் தேதிகளில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

சிறப்பு ரயில்கள் சென்னை பீச் – வேலூர் கன்டோன்மென்ட் – திருவண்ணாமலை என இயக்கப்படுகிறது. இந்த ரயில் வேலூர் கன்டோன்மெண்டில் இருந்து இரவு 09:00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 12:05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

திருவண்ணாமலையில் அதிகாலை 03:45 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5:35 மணிக்கு வேலூர் கன்ட்டோன்மெண்ட் வந்தடையும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *