toppers-2-17516பிளஸ் டூ தேர்வில் பாடவாரியாக 200க்கு 200 பெற்றுள்ள மாணவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஊத்தங்கரையைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் ஜஸ்வந்த் ஆகியோர் 1,200 மதிப்பெண்களுக்கு 1,195 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.

திருவள்ளுவரைச் சேர்ந்த பவித்ரா 1,194 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். எஸ்.கே.வி. பள்ளி, எம்.கண்டம்பாளையத்தை சேர்ந்த வேணுப்ரிதா 1,193 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

மேலும், கணிதம் பாடத்தில் 3,361 மாணவர்களும், இயற்பியல் பாடத்தில் 5 பேரும், வேதியல் பாடத்தில் 1,703 பேரும், உயிரியல் பாடத்தில் 775 பேரும், தாவரவியல் பாடத்தில் 20 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இதேபோல், கணிப்பொறி அறிவியல் பாடத்தில் 303 பேரும், விலங்கியல் பாடத்தில் 10 பேரும், வணிகவியல் பாடத்தில் 3,084 பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 4,341 பேரும், வணிக கணக்கியல் பாடத்தில் 1,072 பேரும் 200க்கு 200 முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டுக்கான பிளஸ் டூ தேர்வில், 94.4 சதவிகித மாணவிகளும், 87.9 சதவிகித மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary