snehaபிரபல நடிகை சினேகாவுக்கு இன்று அதிகாலை ஆண்குழந்தை பிறந்துள்ளது. சென்னை மருத்துவமனையில் குழந்தை பிறந்ததாகவும், பிரசவத்திற்கு பின்னர் தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் சினேகாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை பிறந்த தகவலை சினேகாவின் கணவரும் நடிகருமான பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “இன்றைய நாள் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என்றும், நானும் சினேகாவும் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அருண் வைத்தியநாதன் இயக்கிய ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற படத்தில் சினேகாவும் பிரசன்னாவும் கணவன் மனைவியாக நடித்தனர். இந்த படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் முதலில் இருவரும் இந்த தகவலை மறுத்து வந்த நிலையில் பின்னர் இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் ஒப்புக்கொண்டனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி திருமணம் பிரசன்னா-சினேகா திருமணம் இருதரப்பு பெற்றோர்களின் ஆசியால் சென்னையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு கோலிவுட் திரையுலகினர் திரண்டு வந்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சினேகா கர்ப்பமுற்றதாக செய்திகள் வந்தது. தற்போது ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ள சினேகா மிகுந்த உற்சாகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

English Summary:Popular actress Sneha birth to baby boy.