vijayசிம்பு நடித்த ‘வாலு’ திரைப்படம் நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கியிருந்த நிலையில் இளையதளபதி விஜய் தானாகவே முன்வந்து, ‘வாலு’ படத்தின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து, அந்த படத்தின் ரிலீஸுக்கு தேவையான அனைத்து நிதியுதவியையும் செய்துள்ளார். விஜய்யின் முயற்சியால் தற்போது வரும் வெள்ளியன்று ‘வாலு’ ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் விஜய், டி.ராஜேந்தருக்கு மேலும் ஒரு உதவியை செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய் நடித்து முடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘புலி’ படத்தின் ஒன்று அல்லது இரண்டு ஏரியாக்களின் விநியோக உரிமையையும் டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு கிடைக்கும் என தெரிகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், டி.ராஜேந்தருக்கு சேலம் அல்லது திருநெல்வெலி பகுதியின் ரிலீஸ் உரிமை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அஜீத்தின் தீவிர ரசிகராக சிம்பு இருந்தபோதிலும், டி.ராஜேந்தருக்காக விஜய் இந்த உதவிகளை செய்து வருவதாகவும் டி.ராஜேந்தரின் தீவிர ரசிகராக இப்போதும் விஜய் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

English Summary:Vijay, who also is an assistant for T.Rajentar.