தமிழக அஞ்சல் சரக அளவிலான குறைதீர் முகாம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலக அதிகாரி அலுவலகத்தில் ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாடிக்கையாளர்கள் சேவைக் குறைபாடு குறித்து ல்ஞ்.ற்ய்ஃண்ய்க்ண்ஹல்ர்ள்ற்.ஞ்ர்ஸ்.ண்ய் என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். தபால் மூலமாக குறைகளைக் தெரிவிக்க எஸ். வாசுதேவன் உதவி இயக்குநர்,தலைமை அஞ்சலக அதிகாரி அலுவலகம் தமிழ்நாடு சரகம் சென்னை-02 என்ற முகவரிக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி அன்று அல்லது அதற்கு முன்பு அனுப்பி வைக்கலாம். பணவிடை பதிவுத் தபால் காப்பீட்டுத் தபால் உள்பட பல்வேறு குறைகள் தொடர்பாக தெரிவிக்கலாம்.

இதில், பொருளுக்கான எண் தேதி அனுப்பப்பட்ட அஞ்சலகம் அனுப்பியவர் பெறுபவரின் முழு முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். அஞ்சலக சேமிப்பு அல்லது காப்பீடு தொடர்பான புகார்களுக்கு கணக்கு எண் பாலிசி எண் டெபாசிட் செய்திருப்பவரின் பெயரும் முகவரியும் அஞ்சலகத்தின் பெயர் போன்றவற்றைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *