lab+27116

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்குகிறது. செய்முறை தேர்வை பிப்ரவரி 5ஆம் தேதி முதல் பிப்ரவரி 25ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இந்த சுற்றறிக்கையில் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வை பிப்ரவரி மாதம் 5ஆம் தேதியில் இருந்து பிப்ரவரி 25ஆம் தேதிக்குள் அந்தந்த முதன்மை கல்வி அதிகாரி விருப்பப்படி நடத்தி முடிக்கவேண்டும். செய்முறை தேர்வில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பிப்ரவரி 26-ந் தேதி கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

English Summary: Practical Exam Date Announced for +2 Students.