நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பள்ளித் தேர்வுகள் முடிந்துவிடும் என்று அதிகாரிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். மேலும், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு மறுநாள் ஏப்.19ம் தேதி தான் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப். 10ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்கவும் தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் 10, 11, 12ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதிலோ, தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலோ எந்த பிரச்சனையும் இல்லை என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *