தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 18-ஆம் தேதியன்று பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு:- தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி அனைத்து மக்களவைத் தொகுதிகளுக்கு பொதுத் தேர்தலும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதையடுத்து, 1957-ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதியன்று மத்திய அரசு வெளியிட்ட செலாவணி முறிச் சட்டம் 1881-ன் கீழ் 25-வது பிரிவின்படி பொது விடுமுறை விடப்படுகிறது.

தமிழக அரசு அறிவித்துள்ள பொது விடுமுறையானது ஊதியத்துடன் கூடிய விடுமுறையாகும். இந்த விடுமுறை , தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *