இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் பெரும் சாதனை செய்து வரும் நிலையில் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் அனைத்து ஏரியா ரிலீஸ் உரிமைகளும் பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு தியேட்டர்களை புக் செய்யும் பணிகளில் அந்தந்த பகுதி விநியோகிஸ்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்’புலி’ திரைப்படம் நாளை அல்லது நாளை மறுநாள் தணிக்கை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..

இந்நிலையில் இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பணிகள் முற்றிலும் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. சென்னை, பெங்களூர் உள்பட உலகின் பல இடங்களில் இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் பிரித்து கடந்த சில மாதங்களாக செய்யப்பட்டு வந்தது. தற்போது கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் முற்றிலும் முடிந்துவிட்டதாகவும், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உடன் படத்தை பார்க்க பிரமாண்டமாக இருப்பதாகவும் படக்குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல் ‘புலி’ படத்தின் பின்னணி இசை பணிகளை இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் துவக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மன்னர் காலத்து படம் என்பதால் பின்னணி இசை அந்த காலத்திற்கு ஏற்றமாதிரி இருக்க வேண்டும் என்றும் அதே நேரத்தில் ஹாலிவுட் தரத்தில் இருக்க வேண்டும் என்றும் இசையமைப்பாளரிடம் குறிப்புகள் கொடுத்துள்ளதால் அவர் இந்த படத்தின் பின்னணி இசையை இரவுபகலாக செய்து வருகிறார்.

ரூ.100 கோடிக்கும் அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, நந்திதா, பிரபு, சுதீப், ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, வித்யூலேகா உள்பட ஒரு நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது. நட்டி நட்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார். பி.டி.செல்வகுமார் மற்றும் ஷபு தமீன் தயாரித்துள்ள இந்த படம் இதுவரை இல்லாத வகையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

English Summary : ‘Puli’ graphics work finished and waiting for censor certificate.