தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று(12.07.2023) காலை முதல் தொடங்கியது.

ரயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, இன்று(12.07.2023) காலை 8 மணி முதல் ரயில்வே கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(12.07.2023) முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9ஆம் தேதியும், 13ஆம் தேதியில் முன்பதிவு செய்தால் நவம்பர் 10ஆம் தேதியும், ரயிலில் பயணம் செய்யலாம். 14ஆம் தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 11ஆம் தேதி ரயிலில் பயணம் செய்யலாம்.

இந்தமுறை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் தீபாவளி பண்டிகை வருவதால் வியாழக்கிழமை முதலே பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க பயணிகள் விரைந்து முன்பதிவு செய்து கொள்ள ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் இன்று டிக்கெட் கவுண்டர்கள் ஓபன் ஆன 8 நிமிடத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்ததால் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *