சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் “இன்னும் ஓரிரு மாதங்களில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்துவிடுவார்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் “படப்பிடிப்புக்குச் செல்வதற்கு முன்பே ரஜினியை சந்தித்தேன். அப்போதே மக்கள் மன்றத்தின் பணிகளை முடுக்கிவிட்டுத்தான் சென்றார். அடுத்த மாதம் மக்கள் மன்றத்தின் தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் ரஜினி கட்சியை அறிவித்து தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவார். அவர் கட்சி ஆரம்பித்த பிறகு அவருடன் கூட்டணி வைத்துச் செயல்படுவோம்” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *