Rajini-ranjitலிங்கா’ படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த படம் குறித்த ஆலோசனையில் இருந்தபோது, ரஜினியின் மகள் மூலம் இயக்குனர் ரஞ்சித் ஒரு கதையை கூறியதாகவும், அந்த கதையை கேட்டு அசந்து போன ரஜினி, உடனடியாக படப்பிடிப்பிற்காக நாளை திட்டமிடுமாறு கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய இரண்டே படங்களை இயக்கிய ரஞ்சித்துக்கு ரஜினி படத்தை இயக்கக்கூடிய பெரிய வாய்ப்பு கிடைத்ததற்கு முக்கிய காரணம் செளந்தர்யா ரஜினிகாந்த் என்றே கூறப்படுகிறது. கோவா’ படத்தை செளந்தர்யா தயாரித்தபோது, அந்த படத்தில் வெங்கட்பிரபுவின் உதவியாளராக இருந்த ரஞ்சித், அப்போதே ரஜினிக்காக தயார் செய்து வைத்திருந்த கதையை கூறியதாகவும், அந்த கதைதான் தற்போது எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
\
மேலும் லிங்கா படத்திற்கு விநியோகிஸ்தர்களுக்கு பணத்தை திருப்பிக்கொடுக்கும் பிரச்சனை வந்தபோது, இந்த பிரச்சனை முடிய பெரிதும் உதவிகரமாக இருந்தவர் கலைப்புலி எஸ்.தாணு. அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில்தான் அவரை இந்த படத்தின் தயாரிப்பாளாராக ரஜினி தேர்வு செய்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

ரஜினி-ரஞ்சித் இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூனில் ஆரம்பித்து வரும் 2016 பொங்கல் திருநாளில் ரிலீஸாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.