Aranmanai2_0505கடந்த 15ஆண்டுகளாக கோலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை த்ரிஷா நேற்று தனது பிறந்த நாளை தோழிகளுடன் பாங்காக்கில் சிறப்பாக கொண்டாடினார். அவருக்கு சக நடிகர், நடிகைகளும், நண்பர்களும் டுவிட்டர் மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் சுந்தர் சி, த்ரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியதோடு தனது படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் பிறந்த நாள் பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

சுந்தர் சி இயக்கிய “அரண்மனை” கடந்த வருடம் ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அந்த படத்தின் இரண்டாவது பாகத்தின் திரைக்கதையை தற்போது தயார் செய்துவிட்டார். இந்த படத்தில் சித்தார்த் மற்றும் த்ரிஷா ஜோடியாக நடிக்கவுள்ளனர்.

குஷ்புவின் அவனி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்கும் என கூறப்படுகிறது. த்ரிஷா ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய ‘ஆயுத எழுத்து’ படத்தில் சித்தார்த்துடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஒரு தெலுங்கு படத்தில் சித்தார்த்-த்ரிஷா ஜோடி நடித்துள்ளது